சென்னை: பெண்களை அவமதிக்கும் மனுதர்ம நூலை தடை செய்ய வலியுறுத்தி சென்னையில் விடுதலை சிறுத்தைக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைபோல், அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விசிக மற்றும் திராவிடக் கழகத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.